Sunday, November 8, 2009

நீண்ட ஆணுறுப்பின் நூதன அமைப்பு மற்றும் கற்பின் வரலாறு

திமிர்த்த மார்புகளைத் திரும்பிப் பார்க்காதவர்கள், இடை : புட்ட விகிதாச்சாரம் கவனிக்காதவர்கள், ஸ்கூட்டி பெண்ணை அரை மீட்டர் இடைவெளியில் பைக்கில் துரத்தாதவர்கள் இதைப் படிக்க வேண்டாம். காரணத்தைக் கடைசியில் சொல்கிறேன்.

மேற்கின் போர்ன் இலக்கியம் மற்றும் திரைப்படங்களில் ஒரு கறுப்பன் தோன்றி நம்மூர் ரித்தேஷ் துப்பாக்கி உருவுவது போல் தன் அண்டுராயர் விலக்கி உறுப்பைக் காட்டுவான். தசாவதாரம் என்பது போல் எதிருலுள்ள பருவப் பெண்ணோ, பதிவிரதையோ நெட்டுயிர்த்து எச்சில் முழுங்கி அவனிடம் சரண் புகுவார்கள். கறுப்பர்களின் நீண்டு விடைத்த குறி பற்றிய மித்துதான் இத்தகைய காட்சிகளுக்குப் பின்னணி.

வேர் நீளமான உறுப்பு கொண்டு மட்டுமே பெண்ணைத் திருப்தி அடைய வைக்க முடியும் என்ற பாமரத்தனமான கற்பனைதான். பெண்ணுறுப்பின் அதிஉணர்வு நரம்புப் பின்னல்கள் இரு உள், வெளி உதடுகள் மற்றும் கிளிட்டோரிஸ் எனும் நுண் குறியில்தான் உள்ளன. ஆழத்தில் இந்த உணர்வுகள் இருக்காது. இருட்டில் தாத்தா கண்ணாடி தேடும் விளையாட்டு மட்டும்தான் அது. உறுப்பு நீளப் பருமனுக்கு வேறொரு நிஜ நோக்கம். விந்தை கருமுட்டையின் அருகில் கொண்டு சேர்ப்பது.

ஆன்மீகவாதிகளில் காந்தி விந்தை அடக்கினால் ஆற்றல் விகாசிக்கும் என்று நம்பினார். பாலகுமாரன் தனது கண்ணன் பற்றின நாவலில் வாசுதேவன் தேவகி காம உணர்வின்றிக் கூடியதாக ஒருமுறை குறிப்பிட்டார். புணர்ச்சி இன்றிப் பிறந்தவர் ஏசு.

புணர்ச்சிக்கு இன்ப நுகர்தல், பிறப்பு அறுத்தல், சுவர்க்க வாசல் அப்பாற்பட்டு சில முக்கிய நடைமுறை நோக்கங்கள் உள்ளன. புணர்ச்சி ஒரு பெரும் அரசியல் ஆட்டம்.

கடந்த சில நூற்றாண்டுகளில் நாம் அதிரடியாய் வளர்ந்துவிட்டோம், ஆனால் நம் உடல் இன்னும் கற்காலத்தில் இருந்து விழிக்க வில்லை. உதாரணமாக உங்களிடம் ஒரு வருடத்துக்கான உணவு சேகரிப்பு இருக்கும். ஆனால் உணவிலிருந்து ஆற்றலை கொழுப்பாக உங்கள் தொப்பையில் உடல் சேமிக்கும். நாளை பஞ்சம் வந்துவிட்டால் என்ற பயத்தில். அம்பானியின் உடல்கூட இதைச் செய்யும் என்பதுதான் நகை முரண். அடுத்து உங்கள் மனமும் இது போல் சம்மந்தமின்றிச் செயல்படும். உங்களுக்குத் தோல்வி வருகிறது. அடுத்து மன அழுத்தம். உடனே உருளைக்கிழங்கு வறுவலை, ஜிலேபி, சாக்லேட்டை நாடுவது ஏன்? உடனடி ஆற்றலுக்கும் நீங்கள் தீர்க்க வேண்டிய வாழ்வியல் பிரச்சினைக்கும் என்ன சம்மந்தம்? வனத்தின் ஆபத்தில் இருந்து தப்பிக்க வேண்டிய ஆதிமனிதனின் ஆற்றல் தேவையை தொடர்புறுத்தியே இதைப் புரிய முடியும்.

உங்கள் மனைவி ஒரு கற்பின் கனலி. ஆனாலும் குறியைச் செலுத்தி பின்வாங்கி மீண்டும் செலுத்தும் கஜினி முகமது முறை மற்றும் உங்கள் ஆணுறுப்பின் வாய்ப்பகுதிக்குப் பின்னே உள்ள கழுத்து போன்ற கரைமேடு அமைப்பால் நீங்கள் உங்கள் மனைவியை நீங்கள் சந்தேகிக்கிறீர்கள் என்று பொருளாகிறது.

ஏன்? இந்தப் புணர்ச்சி பிரயத்தனம் மற்றும் வடிவாக்க நூதனத்தின் பிரதான நோக்கங்கள் உங்கள் மனைவியின் புழையில் தேங்கியுள்ள சற்று நேரத்துக்கு முன்பு புணர்ந்த கள்ளக் காதலனின் விந்தை அகற்றுவதே. கள்ளக் காதலன் இல்லை என்கிறீர்களா? ஆனால் நம் மனித வரலாற்றின் முக்கிய அக்கறையே பரம பதம் அடைவதல்ல கள்ளக் காதலனோடு மோதுவது அல்லது அவனை சமாளிப்பதாக இருந்துள்ளது.

ஆண் உறுப்பின் வடிவத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இது ஒரு ஆப்பின் வடிவை ஏறத்தாழக் கொண்டுள்ளது. உறுப்பின் தலைப் பாகம் சுற்றளவில் தண்டைவிடப் பெரிது. உறுப்பின் தலையின் கழுத்து போன்ற கரைமேடு அமைப்பும் சேர்ந்து கொள்ள பிளாஸ்கை அலம்பும் பிரஷ் போல நம் ஆணுறுப்பு வேலை செய்கிறது. உங்கள் பிளாஸ்கை சுத்தம் செய்யப் பயன்படும் முன்-பின் இயங்கு முறை அல்குல் துளைப்பு முறைமையுடன் எவ்வளவு ஒத்துள்ளது யோசியுங்கள். இது அன்னிய விந்தை சமர்த்தாய் வெளியேற்றும் முறை.

இன்னொரு விசித்திரமான தகவல்: ஒரு சராசரி சிம்பன்சியின் குறியை விட இரட்டிப்பு நீளம் மனித ஆணினுடையது. நீளமான உறுப்பால் பெண்குறிக்குள் முழுக்க பொருந்தி பழைய விந்தை வெளியேற்ற முடியும். சிம்பன்சிக்கு இந்த ஆப்பு வடிவ வசதியும் இல்லை.

மனித இருப்புக்கு அவசியமான குணாதிசயங்கள், உடற் கூறுகள் மட்டுமே நிலைக்கும் என்பது ஒரு பரிணாம விதி. உதாரணமாய் கற்காலத்திலிருந்து நம் மூளை அளவு பெரிதும் அதிகரித்துள்ளது. பரிணாமத்தில் அடுத்து அளவில் அதிகரித்தவை நம் சுந்தரலிங்கங்கள். நூற்றாண்டுகளாய் குறியின் அளவு, அதன் கரைமேடு அமைப்புடன் முன்-பின் துளைப்பு முறையும் நிலைத்துள்ளது. இது ஒரு சங்கடமான விசயத்தை நமக்குச் சொல்லுகிறது. நம் பெண்கள் ஆதியிலிருந்து கள்ள உறவில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஏனென்றால் லிங்கத்தின் பணி விந்து பாய்ச்சல் மட்டுமல்ல. அது ஒரு விந்து வெளியேற்றும் கருவி.

இந்த அமைப்போ இயங்கு முறையோ ஆதிமானிட வாழ்வின் எச்சம் மட்டுமே என்று சொல்லலாமா? இன்று நாம் கற்பொழுக்கத்தை கலாச்சார ரீதியாய் நுட்பமாய்ப் பாதுகாக்கிறோம், தாலியால் நினைவுறுத்துகிறோம், தொடர்ந்து மதத் தீவிரவாதத்தால் கண்காணிக்கிறோம். பிறகு எதற்கு நமக்கு ஒரு பழப்பூச்சியின் தந்திரம்? ஆனால் ஆய்வுகள் கற்பொழுக்கப் பதற்றம் ரொம்ப சிக்கலாய் நம் புணர்ச்சி முறைமையுடன் பிணைந்துள்ளதைச் சொல்கின்றன.

கேலப் மற்றும் பலர் (2003) 600க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகளின் உடலுறவு முறைமைகளை ஆய்ந்தனர். இந்த இளைஞ இளைஞிகள் ஜோடி மாற்றிப் புணர்ந்த போது, துணை மீது மற்றபடி கள்ள உறவு சந்தேகம் எழுந்த போது அல்லது ஜோடியை வெகு காலம் பிரிந்து மீண்டும் சந்தித்த போது, இவர்களில் ஆண்கள் ஆழ்ந்த மூர்க்கமான பெண்குறி துளைப்புகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த மூன்று சூழல்களிலும் பாலுறவு விசுவாசம் பற்றின கேள்விகள் ஆணுக்கு எழுகின்றன. ஆழமாய், வேகமாய் துளைப்பதன் மூலம் அவன் பழைய விந்தை (இருக்கிறதோ இல்லையோ) தன்னுணர்வின்றி வெளியேற்ற முயல்கிறான்.

கோல்ட்ஸ் மற்றும் ஷேக்கல்போர்டின் (அச்சில் உள்ளது) ஆய்வு விந்து வெளியேற்றுதல் விழைவுக்கான மற்றொரு சமூகச் சூழலைக் காட்டுகிறது. இல்லாளை சந்தேகப்படும் கணவன்கள் உடனடி அவளுடன் புணர முற்படுகின்றனர். மனைவியை வன்புணர்ச்சி செய்த பெரும்பாலான கணவர்கள் இத்தகைய சந்தேகிகள் என்கிறது இவர்களின் ஆய்வு முடிவு. டால்ஸ்டாயின் அன்னா கரனினாவில் அன்னாவின் கள்ள உறவை அறியும் அலெக்செ அலெக்சொண்டுரோவிச் கெரனின் அவளை வன்புணர முயலும் இடம் நினைவுள்ளதா? அங்கு அவனுக்கு தன் ஆண்மையை நிரூபிப்பது தாண்டி உள்ளூர மற்றொரு நோக்கம் இருந்துள்ளது.

குறியின் முன்தோல் நீக்கப்பட்டவர்கள் நீண்ட நேரம் அதிக விசையூக்கத்துடன் அல்குல் புணர்ச்சியில் ஈடுபடுகின்றனர். மேலும் குறி அதிக ஆழத்திற்கு துளைத்து, மீண்டும் கழுத்துப் பகுதி வரை மீட்டு வருகின்றனர் (ஓஹரா மற்றும் ஓஹரா (1999)). ஓஹரா மற்றும் ஓஹரா முன்தோல் நீக்கின, நீக்காத ஆண்களிடம் உறவு கொண்ட 139 பெண்களை ஆய்ந்தனர். இவர்களில் 73% மேற்கூறிய தகவலை உறுதிப்படுத்தினர். லௌமன் மற்றும் பலரின் (1997) ஆய்வும் இதை உறுதி செய்கிறது. முன் தோல் நீக்கப்பட்ட ஆணின் புணர்ச்சி நடவடிக்கைகள் மாறுகின்றன. அவனது குறியின் கூருணர்வு குறைகிறது. உறுப்பின் தலைப்பகுதிச் சுற்றளவு முன்தோல் அற்ற தண்டினுடையதைவிட அதிகரிக்கிறது. இதுவே அவனது அல்குல் துளைப்பு கால நீட்டிப்பு, நீண்ட உள்செலுத்தல்-வெளியேற்றச் செயல்முறையின் காரணம். இதனால் முன்தோல் நீக்கப்பட்டவருடன் புணர்ந்த பெண்களின் புழையின் கசிவு பெருமளவில் வெளியேற்றப்பட்டு வறட்சி ஏற்படுகிறது. இந்தப் பெண்கள் குறி எரிச்சல், வலி ஆகிய புகார்கள் சொல்கிறார்கள் (ஓஹரா மற்றும் ஓஹரா (1999)). கசிவு நீர் அகற்றலிலிருந்து ஆண்குறி சிறந்த விந்து அகற்றல் கருவி எனபது நிரூபணமாகிறது.

முன்தோல் நீக்கிய உறுப்பு இவ்விசயத்தில் திறனுறுதி மிக்கது. பிளெடெக் மற்றும் பலர் (2002) ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைச் சொல்கிறார்கள்: முன்தோல் நீக்கியவர்களின் குழந்தைகளிடம் பெற்றோரின் சாயல் அதிகம்.

இந்த முன்தோல் விவகாரத்தை பரவலாய் ஆய்ந்து விவாதித்துத்தான் நாம் தீர்மானிக்க முடியும். அனுபவஸ்தர்கள் எழுதுங்கள்.

சுன்னத்தைக் கொண்டாடுகிறேன் என்று ராமசேனையினர் விசனிக்க வேண்டாம். முன்தோலை விடுங்கள், உங்களுக்குத்தான் வால் உள்ளதே!

நம் ஊரில் தங்க நாணயம் உள்ளிட்ட விலைமதிப்பற்ற பரிசுப் பொருட்களுக்கு அடுத்த படியாய் சுளுவாய்க் கிடைப்பது வீட்டு வேலை மற்றும் மகப்பேற்றுக்காய் மனைவி. வேறு எதை அடைவதற்கும் குறைந்தபட்ச திறமை, உழைப்பு, அதிர்ஷ்டம் வேண்டும். என்னை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு கால் நொண்டி. என்னை மணப்பதற்கு இரண்டு பெண்கள் தயாராய் இருந்ததாய் அம்மா சமீபத்தில் சொன்னாள். அதுவும் வரதட்சணை தந்து. எனக்குக் கொஞ்சம் எச்சில் ஊறினாலும் போராடி காதலித்து மணந்ததுதான் சாதனை; அந்த சாகசம் இல்லாமல் பெண்ணை அடைவது குமாஸ்தாத்தனம் என்று நினைத்துக் கொண்டேன். வாழ்வில் ஒரு பெண்ணைக் கூட கவர முனையவோ, சுயமுயற்சியில் அடையவோ செய்யாத கொடானு கோடி மந்தவேக மனிதர்கள் தினமும் ஊத்தை டிபன் பாக்சுடன் மாலை வீடு திரும்பும் இந்த ஆமைப் பந்தயச் சூழலில் நம் குறி மட்டும் சோராமல் தீவிர விந்துப் போட்டியிடுகிறது. ஜட்டிக்குள் இருட்டடிப்பு செய்யப் பட்ட பெரும் வரலாறு இது.

ஆணுறுப்பின் முன் இந்த மகா பிரபஞ்சத்தின் அனாதி கோடி உயிர்கள் சார்பில் நாம் தலை வணங்குவோம். நம சிவாய வாழ்க!

கன்னியாஸ்திரீகளும் பாதிரியார்களும் கள்ள உறவு

எதன்மீதும் புனிதம் கற்பிக்கப்பட்டால்தான் அதனை முன்னிறுத்தி மக்களை மதவாதிகளாக ஆக்கமுடியும். இதனை உணர்ந்திருந்த மதங்கள், மடங்களையும் திருச்சபைகளையும் உருவாக்கின. அதன் தலைவர்கள் புனிதர்களாகி வழிபாட்டுக்குரியவர்கள் ஆனார்கள். இவர்கள் இயற்கைக்கு மாறாக இல்லறம் தவிர்த்து மனித சமுதாயத்தில் தம்மை உயர்ந்தவர்களாக, தனித்தவர்களாக அடையாளப்படுத்திக் கொண்டனர். ஆனாலும், இவர்களது வாழ்வியலோ மிக உயரிய வசதிகள் உடையதாக இருக்கும். எல்லாவிதமான சத்து நிறைந்த உணவுகளையும் புசிப்பார்கள். தமக்கென தனிச் சீருடையை அணிந்து கொண்டு காட்சி தருவார்கள். அப்போதுதான் மக்களின் கவனம் இவர்கள்மீது படியும் அல்லவா? இந்தியாவில் முன்காலத்தில் உருவான பல சமுதாயங்களின் கூட்டுக்கலவையான இந்து மதத்தில் மடங்களும், சாமியார்களும் உண்டு. அதுபோலவே கிறித்துவ மதத்திலும் உலகளாவிய அளவில் திருச்சபைகளும் உள்ளன. அதன் நீட்சியாக இந்தியாவிலும் திருச்சபைகள் அமைக்கப்பட்டு தேவாலயம் அதனையொட்டிய பள்ளிகளிலும், மருத்துவமனை ஆகியவற்றை நிருவகிக்க பாதிரியார்கள் பொறுப்பேற்றிருப்பார்கள்.

கத்தோலிக்க திருச்சபையின் பாதிரியார்கள் மணவாழ்வில் ஈடுபடக்கூடாது என்பதும் இல்லறம் துறந்து இறைப்பணிஆற்றவேண்டும் என்பது மதக்கட்டளை. அதேபோல வேத ஊழியம் செய்யவரும் பெண்களும் கன்னியாஸ்திரீகள் என அழைக்கப்படுகின்றனர். இவர்களுக்கும் மேற்சொன்ன புலனடக்கவிதிகள் பொருந்தும். ஆனால், இவ்வாறு இயற்கை உணர்வுகளுக்கு எதிராக மனிதர்களால் இருக்க முடியுமா என்பதை பாதிரியார்களாக இருந்து பகுத்தறிவாளர்களாக மாறியவர்களில் தொடங்கி, உலகியல் கற்ற, உடலியல் கற்ற அனைவரும் கேள்வி எழுப்புவதுண்டு.

மனித உடலில் ஏற்படும் வேதிமாற்றங்களால் உடல் இச்சை என்பது தவிர்க்க முடியாதது; மாற்றுப் பாலினத்தின் மீதான ஈர்ப்பு என்பது இயற்கையானது. அதனைத் தவிர்ப்பது இயலாதது. ஆனால், இதனைக் கடந்து மனதை ஆண்டவனுக்கு அர்ப்பணித்து இறைப்பணி செய்வோர் இவர்கள் என்றே மதபீடங்கள் மார்தட்டுகின்றன. என்றாலும் அவ்வப்போது மதப்பீடங்களில் திருச்சபைகளில் பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்து மதக்கட்டுகளை அறுத்தெறிந்து வருகின்றன.

இப்படித்தான் அண்மையில், கேரளாவில் ஒரு கன்னியாஸ்திரீ ஆமென் - ஒரு கன்னியாஸ்-திரியின் ஆத்ம கதை என்ற நூல் பல உண்மைகளை உரைத்துவிட்டது. ஒரே மாதத்தில் மூன்று பதிப்புகளைக் கண்டுவிட்ட இந்த நூலை எழுதியவர் கன்னியாஸ்திரீ ஜெஸ்மி (வயது 53).

இவரது இயற்பெயர் மியாமி ரபேல். தனது 25ஆம் வயதில் காங்கரகேஷன் ஆஃப் மதர் ஆஃப் கார்னல் (CMC) என்னும் திருச்சபையில் இணைத்துக் கொண்ட ஜெஸ்மி, இங்கிலீஷ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கல்லூரியில் விரிவுரையாளர், முதல்வர் எனப் பணியாற்றிய இவர் தமது 30 ஆண்டுகால கன்னியாஸ்திரீ வாழ்வில் தமக்கு நேர்ந்த பாலியல் வன்முறைகள் குறித்து இந்நூலில் எழுதியுள்ளார்.

புனித மடங்கள் எனச் சொல்லப்படும் மதச்சபைக்குள் நிகழ்ந்து வரும் பாலியல் எல்லை மீறல்களை விவரித்துள்ளார் கன்னியாஸ்திரீ ஜெஸ்மி. கன்னியாஸ்திரீகளிடையே ஓரினச் சேர்க்கை தடைகளின்றி இருக்கிறது. கன்னியாஸ்திரீகள் பாதிரியார்களுடனும் வெளியாட்களுடனும் பாலியல் உறவு வைத்திருப்பது தொடர்புடைய பல நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன என்று கூறும் ஜெஸ்மி, பாதிரியார்கள் தன்மீது நிகழ்த்திய பாலியல் வன்புணர்ச்சியையும் கூறுகிறார்.

நான் பெங்களூருக்குச் சென்றபோது வரவேற்க வந்த பாதிரியார் என்னை இறுக அணைத்து அதிர்ச்சி கொடுத்தார். அங்கு லால் பூங்காவுக்கு அழைத்துச் சென்று மரங்களின் அடியில் அந்தரங்கமான நிலையில் அமர்ந்திருந்த ஜோடிகளைக் காண்பித்தார். பின்னர் உடல் ரீதியான காதலின் தேவை குறித்தும், பெண்களுடன் முறைகேடான உறவு வைத்திருந்த பாதிரியார்கள் மற்றும் பிஷப்புகளின் கதைகளையும் சொன்னார். பிறகு தனது படுக்கை அறைக்கு அழைத்துச் சென்று அவரது கட்டிலில் அமரவைத்து என்னை இறுக அணைத்தார். ஓர் ஆணை முழுமையாய் பார்த்திருக்கிறாயா எனக்கேட்டு விட்டு ஆடைகளைத் துறந்தார் இதைத் தொடர்ந்து ஜெஸ்மி எழுதியுள்ள சில வரிகளை நாம் இங்கு எழுதமுடியாது.

கன்னியாஸ்திரீகளின் மடத்தில் பல கன்னியாஸ்திரீகள் ஜோடியாகவே இருப்பார்கள்; வேறு சிலரிடையே பாலியல் நடவடிக்கைகள் இருந்தது என்று எழுதியுள்ள ஜெஸ்மி, சிஸ்டர் லிமி என் மீது ஈர்ப்பு கொள்ளத் தொடங்கினார். எனக்கு காதல் கடிதங்கள் எழுதினார். அதற்கு நான் பதில் எழுதவில்லை. சிஸ்டர் லிமி எனக்கு எதிராகத் திரும்பவே அவர் செல்வாக்கு மிக்கவர் என்பதால் வேறு வழியில்லாமல் அவரின் பாலியல் இச்சைகளுக்கு நான் சிலகாலம் பலியாக நேர்ந்தது என்று எழுதியுள்ளார்.

புனிதமானவர்கள் என்றும் இறைப்பணியாளர்கள் எனவும் கூறப்படும் கிறித்துவ திருச்சபையின் பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரீகள் மீதான ஜெஸ்மியின் இந்தக் குற்றச்சாட்டுகளைக் கண்டு கேரள கிறித்துவ அமைப்புகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளன. ஜெஸ்மியின் குற்றச்சாட்டுகளுக்கு சி.எம்.சி. அதிகாரபூர்வமான எந்தப் பதிலையும் இதுவரை கூறாமல் மவுனம் காக்கிறது. ஆனால் அதன் செய்தித் தொடர்பாளர் பாதிரியார் பால் தேலக்காட், ஜெஸ்மி எழுப்பியுள்ள பிரச்சினைகளை புறக்கணித்துவிட முடியாது. சர்ச்சும், சி.எம்.சியும் இதனைக் கருத்தில் கொள்ளவேண்டும். பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகளிடையேயான பாலியல் உறவுகள் உண்மையாக இருக்கலாம்; திருச்சபைகளில் ஆங்காங்கே இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

ஆணும் - பெண்ணும் இணைந்து வாழ்தல் என்பது உலகியல் இயல்பு. இதற்கு எதிராக புனிதத் தன்மையை கற்பித்து மதங்கள் செயல்படும்போது அதன்மீதான இயற்கையின் தாக்குதலே இதுபோன்ற குற்றச்சாட்டுகளாக எழுகின்றன. 15 ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்குத் திருமணம் செய்துகொள்ளும் உரிமை வேண்டும் என்று 400 பாதிரியார்கள் போப் ஆண்டவருக்கு விண்ணப்பம் போட்டது இப்போது நினைவுக்கு வருகிறது.

அவர்கள் வலியுறுத்தும் கொள்கைக்கும் அவர்களது நடத்தைக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி நிலவுகிறது. எனக்குத் தெரிந்த பெரும்பாலான கன்னியாஸ்திரீகளும் பாதிரியார்களும் கள்ள உறவு வைத்திருந்தார்கள் அல்லது மோசமான ஊழலில் ஈடுபட்டிருந்தனர் - இப்படிக் கூறுவது நாம் அல்ல; - கன்னியாஸ்திரி ஜெஸ்மி. நாம் என்ன சொல்வது? ஆமென் என்று சொல்லலாம்; ஆமென் என்பதற்கு எனவே அது இருக்கிறது என்று பொருளாம்.