Sunday, December 13, 2009

காமக்கவிதைகள்-2

மீசை முத்தம் என்றால் பெண்ணே!

நான் உனக்குத் தருவது.

மீசை இல்லாத முத்தம் என்றால்

நீ எனக்குத் தருவது.

தண்ணீர் முத்தம் என்றால் அன்பே

தடயமில்லாமல் இடுவது

தரையின் முத்தம் என்றால் கொஞ்சம்

தடயத்தோடு விடுவது.

கட்டில் மேலே பத்துக் கட்டளை

கட்டளைப்படியே செய்வாயா?

என்னை மெதுவாய் துடிக்கவிடு

எச்சில் மாற்றி உண்டுவிடு

உடையை மெல்ல உதறிவிடு

உன்னை எனக்கு உடுத்திவிடு

சிவந்த பாகம் வெளுக்கவிடு

கறுத்த பாகம் சிவக்கவிடு

எந்தன் உயிரை உறிஞ்சிவிடு

உந்தன் உயிரால் நிரப்பிவிடு.

கட்டில் மேலே பத்துக்கட்டளை

கட்டுப்பட்டு நடப்பாயா?

நயனம் இரண்டும் மூடிவிடு

நான்கு புலன்கள் திறந்துவிடு

கூறைப் புடவை களைந்துவிடு

கூந்தல் சேலை உடுத்திவிடு

என்னைக் கொஞ்சம் ஆளவிடு

எதிர்ப்பது போல வளைந்து கொடு

கவிதை போல் சில உளறிவிடு

கட்டில் கடன்கள் திருப்பிக்கொடு

எந்த சுகங்களை நீ ரசித்தாயோ

அந்த சுகங்களைப் பேசிவிடு

அந்த சுகங்கள் தொடர்ந்திடவே

அரைமணி நேரத்தவனை கொடு.

No comments:

Post a Comment